தமிழத சட்டசபை தேர்தலில் அதிமுக எத்தனை இடங்களில் போட்டியிடும் என்பது குறித்து உத்தேச பட்டியல் குறித்து பார்க்கலாம். எனினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு பின்னர் அறிவிக்கப்படும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு அதிகாரப்பூர்வமாக இறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லி மற்றும் சென்னையில் நடைபெற்ற பலகட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களின் விவரங்கள் வெளியாகியுள்ளன.

இந்தத் தேர்தலில் அதிமுக, தனது பழைய கூட்டணிக் கட்சிகளான பாஜக மற்றும் பாமகவுடன் மீண்டும் கைகோர்த்துள்ளது. குறிப்பாக, பல ஆண்டுகளுக்குப் பிறகு டி.டி.வி. தினகரனின் அமமுக இக்கூட்டணியில் இணைந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் முக்கிய மாற்றமாகப் பார்க்கப்படுகிறது. உத்தேச தொகுதிப் பட்டியல் விவரம்: அதிமுக: 171 இடங்கள் (இரட்டை இலை சின்னம்) பாஜக: 27 இடங்கள் (தாமரை சின்னம்) பாமக: 18 இடங்கள் (மாம்பழம் சின்னம்) அமமுக: 11 இடங்கள் (குக்கர் சின்னம்) தமாகா: 3 இடங்கள் (சைக்கிள் சின்னம்) இதர கட்சிகள்: 4 இடங்கள் (புரட்சி பாரதம், ஐஜேகே உள்ளிட்ட கட்சிகளுக்கு) புரட்சி பாரதம் இரட்டை இலை சின்னத்திலும், ஐஜேகே, தமமுக, புதிய நீதி கட்சி ஆகியவை தாமரை சின்னத்திலும் போட்டியிடும் என தெரிகிறது.

இந்தத் தேர்தலில் அதிமுக குறைந்தபட்சம் 171 தொகுதிகளில் நேரடியாகப் போட்டியிடுகிறது. இதன் மூலம், கூட்டணிக் கட்சிகளின் தயவின்றி அதிமுக தனிப் பெரும்பான்மையுடன் (118 இடங்கள்) ஆட்சி அமைக்க வேண்டும் என்பதே எடப்பாடி பழனிசாமியின் முக்கிய இலக்காக உள்ளது. முக்கியத் தொகுதிகள் எங்கே? கொங்கு மண்டலம்: அதிமுக, பாஜக மற்றும் பாமக ஆகிய மூன்று கட்சிகளுமே கொங்கு மண்டலத்தில் அதிக இடங்களைக் குறிவைத்துள்ளன. குறிப்பாக கோயம்புத்தூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் இக்கூட்டணி மிக வலுவாகக் களம் இறங்குகிறது. தென் மாவட்டங்கள்: டி.டி.வி. தினகரனின் அமமுக இணைந்திருப்பதால், ராமநாதபுரம், தேனி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் அதிமுக கூட்டணிக்கு கூடுதல் பலம் கிடைத்துள்ளது. வட மாவட்டங்கள்: பாமக தனது செல்வாக்கு மிக்க தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் வேலூர் மாவட்டங்களில் என 18 இடங்களைப் பெற்றுள்ளது. அடுத்த நகர்வு என்ன? தொகுதிப் பங்கீடு முடிந்துள்ள நிலையில், அதிமுக தனது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று இரவு அல்லது நாளை காலை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. “திமுகவின் 5 ஆண்டு கால ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம்” என எடப்பாடி பழனிசாமி சூளுரைத்துள்ள நிலையில், இந்த மெகா கூட்டணி தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகிவிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *