தமிழ்நாடு உட்பட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் மாநில சட்டப்பேரவைகளின் பதவி காலம் மே மாதத்துடன் நிறைவடைய உள்ளது. இதனால், தேர்தலை நடத்துவதற்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் முடுக்கிவிட்டுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு உட்பட 5 மாநிலங்களுக்கு தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், தேர்தல் ஏற்பாடு பணிகள் குறித்து தலைமை செயலாளர்கள் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து தலைமை தேர்தல் ஆணையர்கள் கூட்டம் டெல்லியில் இன்று (மார்ச் 15) காலை 11 மணி அளவில் நடைபெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *